Showing posts with label அறிவுரைகள். Show all posts
Showing posts with label அறிவுரைகள். Show all posts

Friday, 21 February 2014

''விசாரிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை நாமே விசாரித்துக் கொள்வோம்.''

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-
அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்

மேலும் மக்களை நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும், தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும். இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (ஆலு இம்ரான் : 104)

இங்கே நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் -  நல்லதைக் கொண்டு ஏவுபவர்கள், அழைப்பாளர்கள் பற்றியும், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள் பற்றியும் ஒரு முஃமினுடைய மூன்று குணாதிசயங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்மையின் பக்கம் அழைப்பவர்கள் முதலில் தான் எந்த நன்மையின் பக்கம் மக்களை அழைக்கின்றோமோ, அந்த நன்மையைப் பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உள்ள நபிமார்களுக்கு சீடர்கள் இருந்தார்கள். அந்த சீடர்கள் தங்களது நபிமார்கள் மறைந்தவுடன் அந்த நபிமார்கள் எதை எதைக் காட்டித் தரவில்லையோ, அவற்றை எல்லாம் செய்து கொண்டும், அதன் மூலம் எழுந்த தீமைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள். அதனால் தான் அவர்கள் வரலாறு நெடுகிலும் அழிக்கப்பட்டு வந்திருப்பதை திருமறை வாயிலாக, ஆது, ஸமூது, மத்யன், ஹுது என பல்வேறு கூட்டத்தார்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

முதியோர்களைப் பேணும் முறை பற்றி இஸ்லாம்

முதியோர்களின் தள்ளாத வயதில் அவர்களைக் கண்காணித்து அவர்களைக் கண்ணியப்படுத்தி அவர்களது தேவைகளை ஒருவர் நிறைவேற்றுவது என்பது, அவருக்குக் கிடைத்த பெரும்பேராகவும், அவ்வாறு செய்பவரது ஆன்மீக வளர்ச்சிக்கும், இறைப்பொருத்தத்திற்குக் கிடைத்த நல்வாய்ப்பாகவும் அமைகின்றது என இஸ்லாம், முஸ்லிம்களுக்க வலியுறுத்திச் சொல்வதே இதன் காரணமாகும். இஸ்லாமானது பெற்றோர்களுக்காக பிரார்த்திக்க மட்டும் வலியுறுத்தவில்லை, மாறாக தான் எதையுமே செய்ய இயலாத குழந்தையாக இருந்த பொழுது அவர்கள் தங்களது சுயநலன்களை மறந்து நமக்காக அவர்கள் செய்த இணையற்ற ஈடுசெய்ய இயலாத சிரமங்களை எண்ணிப்பார்த்து, தன்னைப் பெற்றவரது முதுமைக் காலத்தில் அவரிடம் பணிவையும், இரக்கத்தையும் வெளிக்காட்டி அவர்களிடம் அளவு கடந்து நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் முஸ்லிம்களைப் பணிக்கின்றது. குறிப்பாக தாயாரிடத்தில் மிகவும் அன்பு காட்டி அவர்களைக் கண்ணியப்படுத்துமாறு இஸ்லாம் வலியுறுத்திக் கூறியுள்ளது.

Friday, 7 February 2014

இழிவைத் தரும் முகஸ்துதி

உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும். மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.
ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)
எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.
(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

Monday, 20 January 2014

பயனுள்ள ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய தகவல்கள்

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

Thursday, 2 January 2014

ஹலாலான உழைப்பின் சிறப்பு & ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்

ஹலாலான உழைப்பின் சிறப்பு

இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.


தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)


அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

Wednesday, 11 December 2013

நெஞ்சோடு... பாகம் 1-2

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
நெஞ்சோடு... பாகம் 1-2  Download - நெஞ்சோடு... பாகம் 1-2

இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்.. 

* அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? 

* மனிதன் தெய்வம் ஆக முடியுமா? 

* பாவம் பெருக மதம் காரணமா? 

* கன்வர்ட் எனும் சொல்லே குர்ஆனில் இல்லை..

எங்கே அமைதி..?

Publihser: இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
எங்கே அமைதி..? Download - எங்கே அமைதி..?


இந்த புத்தகத்தில் அடங்கியவற்றில் சில

* அமைதி இன்றைய நிலை 

* உணர்வுகளைக் காயப்படுத்தினால்... 

* இறைவனுடன் அமைதி பெற 

* அநீதியான ஆட்சி 

* இனங்கள் மோதல் இரத்தக்களறி தீர்வு என்ன?

சிந்தனை செய் மனமே!

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்
சிந்தனை செய் மனமே! Download - சிந்தனை செய் மனமே! 

சிந்தனை செய் மனமே!

* உன்னால் என்ன செய்ய முடியும்! 

* அவரென்ன தத்துவ ஞானியா! 

* ஆன்மிகவாதிகளின் வாழ்க்கை நிலை! 

* இறைவனை ஏன் வழிபட வேண்டும்! 

* தலைவர்களும் தொண்டர்களும்! 

* வழி தவறி விடாதே

கண்ணாடியாய் இருங்கள்

Publihser: ஜீரோ பப்ளிகேஷன்ஸ்கண்ணாடியாய் இருங்கள்
Download - கண்ணாடியாய் இருங்கள்

கண்ணாடியாய் இருங்கள்... 

* உண்மையாளராய் இருங்கள்! 

* பிறர் குறையை மறைத்திடுங்கள்! 

* இரட்டை வேடம் போடாதீர்கள்!

* தன்மையாகப் பேசுங்கள்! 

* பெருமையடிக்காதீர்கள்! 

* வசைபாடாதீர்கள்!

மனிதவழிமுறைகளும் இறைக்கட்டளையும் - டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

வழங்குபவர்: பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள். இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா, சவூதி அரேபியா நாள்: மார்ச் 7, 2013 நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா