மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன ஆறுதல் அடைவதற்கும் மிகப் பெரிய பாலமாக அமைந்துள்ளன. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறன. இந்த உறவுகளை நல்ல முறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்ல நிலையில் வாழ்வான்.
இந்த உறவு முறைகளில் அண்டை வீட்டாருடன் ஏற்படும் உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்ல முறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும். திருக்குர்ஆன், நபிமொழிகளில் அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும்,உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)
இந்த உறவு முறைகளில் அண்டை வீட்டாருடன் ஏற்படும் உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்ல முறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும். திருக்குர்ஆன், நபிமொழிகளில் அண்டை வீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும்,உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)