Thursday, 15 November 2012

இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்

இஸ்லாத்தை பற்றி  உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம் கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.

இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா

இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.
இஸ்லாம் பற்றி பெருமையாக அண்ணாவும் சொல்றாங்க கேளுங்க...

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு - உரை: ஈ.வெ.ரா. பெரியார்

இஸ்லாம் பற்றி பெருமையாக பெரியாரும் சொல்றாங்க கேளுங்க...
இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.

Tuesday, 13 November 2012

காபி மற்றும் தேநீர்

காபி என்பது எல்லோராலும் மிகவும் விரும்பிக் குடிக்கப்படும் பானம். இதில் கலந்திருக்கும் இரசாயனப் பொருள் கஃபின் (Caffeine) இதனால் ஏற்படும் சீர்கேடுகள் பலப்பல. காலையில் கண் விழித்த உடனேயே காபி, தேநீர் போன்றவைகள் மூலம் இரசாயன ஆபத்துக்களை நாம் மனம் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்.

விழித்துக் கொள்வோம்…!

ஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான் பல தவறுகள் நடக்கின்றன. ஒரு தவறு நடந்து விட்டால் தப்பு செய்தவனை மட்டும் குறை கூறவோ பழி போடவோ முடியாது. அதற்கு காரணமானவர்களையும் யோசிக்க வேண்டும்.

புகை பிடிப்பதால் என்னதான் ஆகி விடப்போகிறது! – கொஞ்சம் பார்ப்போமா?

பல்வேறு நோய்களை உருவாக்கி, உயிருக்கே உலை வைக்கும் புகையைப் பற்றிய சில உண்மைகள் :
1. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும், உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் (உதாரணமாக, ஒரு நாளைக்கு 5 சிகரெட் வீதம் ஒரு வாரத்திற்கு பிடிக்கும் புகை, உங்கள் மொத்த வாழ்நாளில் இருந்து 1 நாளை குறைத்து விடுகிறது).
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்களும் அடங்கும்.

சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள்!

காலை உணவை தவிர்க்காதீர்கள்!
வேலைப்பளு அது இதுவென்று காலையில் சாப்பிடாமல் இருந்து விடுகிற வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் காலைச் சாப்பாட்டை இப்படி தவற விடுவது நல்லதல்ல என்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
காலையில் சாப்பிடுபவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகம் என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட 29 ஆயிரத்து 206 ஆண்களில் ஒருவருக்குகூட ஆரம்பத்தில் நீரிழிவு தாக்கவில்லை. நீரிழிவு வரக்கூடாது என நினைக்கிற ஆண்கள் காலை சாப்பாட்டை தவற விடாமல் இருப்பது நல்லது.

வேப்பிலைக்கு நிகரான கறிவேப்பிலை!

வேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், அடடா.. இது எங்க பாட்டான் சொத்து  என்று விழித்தெழுந்து உலக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி உரிமையை மீட்டுவந்தோம். வேம்பின் அருமையை மறந்துபோனதன் விளைவுதான் இது. இதே நிலைமை வெகு விரைவில் கறிவேப்பிலைக்கும் வரலாம்!

ரசாயன மயம்

தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ சஞ்சிகையில் (Ocupational and Environmental Medicine Journal) வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை என்னவெனில் ரொட்டி, பன், பிஸ்ஸா, போன்ற பொருட்களை விரைவில் தயாரிக்க அவைகளின் மூலப் பொருளான மைதாவில் ஆல்பா அமைலேஸ் (ALFA AMYLASE) என்ற ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த நொதிப் பொருளின் தொடர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு இரைப்பு, ஆஸ்துமா, கண் எரிச்சல் மற்றும் தோல் சிவத்தல் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். (ஆதாரம் the sunday review, april 18.1998) தொடர்ந்து இவ்வுணவுப் பொருட்களை உட்கொள்கிறவர்களின் நிலை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.

நிலத்தடி நீர் மாசு!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை கலந்து இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.