இன்று நம்மில் ஒவ்வொருவரும் வருடந்தோறும் நோன்பு வைக்கிறோம். ஸஹர் நேரத்தில் உணவு உண்கிறோம். பகலில் ஒரு மிடரு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு வைக்கிறோம். ஆனால் நம்பிக்கையோடு நோன்பு வைக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்களே; எந்த மாதிரி நம்பிக்கையை ஒரு விசுவாசி வைக்க வேண்டும்? அந்த நம்பிக்கை நம்மிடம் உண்டா?ஷஅபான் மாதம் நம்மைவிட்டு விடைபெறும் போது நம்முடைய உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சிஊடுருவுகிறது. நோன்பு முடிந்தால் பெருநாள் அப்பொழுது புத்தம் புதிய ஆடைகளில் நாம் வலம் வரலாம். நாவிற்கு சுவையூட்டும் ஆகாரங்கள் உண்ணலாம் என்ற ஆனந்தம் தோன்றக்கூடாது. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
”ரமலான் மாதம் வந்து விட்டால்சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். நூல் : புகாரி 1898இ 1899
இந்த நம்பிக்கை நம்மிடம் வேண்டும்இ நமது குழந்தைகளிடம் நாம் ”சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் வருகிறது. அந்த சுவனத்தில் பூஞ்சோலைகள்இ நீரருவிகள்இ வித விதமான மலர்களுடன் கூடிய பழங்கள்இ முத்துக்களும் பவழங்களும் பதிக்கப்பட்ட இருக்கைகள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். அவனுக்கு பிரியமானவர்களாக நாம் மாறினால் அவற்றை அல்லாஹ் நமக்கு பரிசாக வழங்குவான்” என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
சதா கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்,காலத்தை வீணடிக்கும் இளைஞர், இளைஞிகளிடம் ”ஷைத்தான்கள் விலங்கிடப்படும் ஒரு மாதம் நமக்கு வர உள்ளது. வீணாய்ப்போகும் காரியங்களில் நேரத்தை வீணடிக்காமல் அல்லாஹ் ஷைத்தான்களுக்கு விலங்கிடும் போது இந்த ரமலானிலிருந்து ஷைத்தானியத்தனமான காரியங்களிலிருந்து நீங்களும் விலகியிருங்கள்” என்று நாம் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அதே போல் இல்லங்களில் தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் நல் இல்லத்து மங்கையரிடம் ரமலானின் சங்கையை எடுத்துரைத்து அவர்களின் ஈமானை நாம் வலுப்படுத்த வேண்டும். இதெல்லாம் செய்வதற்கு முன்னால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாம் அவருடைய பொன்மொழிகள் மீது அதீத நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது நாம் ஈமானிய வலுவுள்ளோராக ஆவோம். இவ்வாறான நம்பிக்கை ஈமான் நமக்குள் தோன்றும் போது அதன்பிரதிபலிப்பாக நம்மிடம் நல்லமாற்றங்கள் நிகழ வேண்டும்.