Thursday 21 November 2013

பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தையாக வளர்ப்போம்


இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன.



1. நிலையான தர்மம்.

2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி.

3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.

முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.


திக்ர் என்ற பெயரால்...

Post image for திக்ர் என்ற பெயரால்…..
திக்ர் என்ற பெயரால் அரங்கேற்றப்படும் அணாச்சாரங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மா பரிசுத்தப்பட வேண்டும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் தீமை, பாவங்களின் கரைகள் கழுவப்பட்டு அதிலிருந்து பாதுகாப்பும் பெறவேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றது. மிகக் கெட்டவனாக இருந்தபோதிலும் எப்போதாவது அவன் உள்ளம் இப்படி சிந்திப்பதுண்டு. இறைநினைவு ஒன்று மட்டுமே இத்தீய நிலைகளிலிருந்து காப்பாற்றி… தன்னை மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழச்செய்யும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் இறைநினைவு வரவேண்டும் என்று சொல்லி தம்மைத்தாமே வருந்தித் கொள்வதும் இயல்புக்கு மாற்றமாக செயல்படுவதும் நாம் காண்கிறோம். துறவரம் தானே வகுத்துக்கொண்டு அதை தாமே மீறுபவர்களை பற்றி ”குர்ஆன்” குறிப்பிடும்போது அவர்களாகவே தங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறது. இவை இறை நினைவா? உண்மையில் இறைநினைவு என்றால் என்ன, என்பதை இரத்தின சுருக்கமாக இங்கு நாம் காண்போம்.
இறைவனை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் திருப்தி அடையவில்லையா? (13:28) என்று அல்லாஹ் கேட்கிறான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்.

Home Remedies To Remove Skin Tags

Home Remedies To Remove Skin Tags 1. Ginger Take raw ginger and make it into pieces and rub it on skin tags daily up to 2-weeks automatically tags will fall down slowly. 2.Apple cider vinegar Apple cider vinegar is a best preferable remedy for removing skin tags.Apply a dab of cider vinegar on cotton ball and apply it on the affected area it cause some pain for few minutes.Repeat this process 25 to 45 days to vanish your skin tags permanently. 3.pineapple Take pineapple juice and apply it on affected area 3-times in a day.do this 7 to 10 days without rinse it off . 4.Onion juice Take onion and make it into slices keep it in a container with added salt 8-10 hours.morning make juice with that mixture and in the evening apply this juice on tags leave it overnight and wash it in the morning.do this process every night for 10 days. 5.banana peel Take banana peel and apply it on affected area and cover up with bandages overnight, in the morning remove the bandage and rinse it off with water and repeat this every night until the skin tag will cut off from skin.

Tuesday 5 November 2013

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?

Photo: குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி?  

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.

அதற்கு பல காரணங்கள் உண்டு.

1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது:

நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். பதில் கிடைக்கும் வரை தொடர்ந்து கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கும். எவ்வளவு வேலையாக இருந்தாலும் உடனே குழந்தையின் கேள்விக்கு விடை சொல்லுங்கள். இதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்,

முறை.1: பதில் சொல்ல முடியாத அளவுக்கு முக்கிய வேலையாக இருந்தால், "அம்மா, முக்கிய வேலையாக இருக்கிறேன், வேலை முடிந்ததும் பதில் சொல்கிறேன்" என்று சொல்லுங்கள்.

காரணம்: சில குழந்தைகள் கேள்விகள் கேட்டவுடன், ஏதாவது ஒரு பதிலை உடனே எதிர்பார்க்கும். அப்பதில் கேட்கும் கேள்விக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

முறை.2. சுருக்கமாக ஒரு பதிலை சொல்லிவிடுங்கள். வேலை முடிந்ததும் விரிவான பதிலை கொடுத்துவிடலாம். ஆனால் வேலை முடிந்ததும் விரிவான பதிலைத் தருகிறேன் என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னால் உடனே விரிவான பதில் வேண்டும் என்று அடம் பிடிக்கலாம்.

முறை.3. வீட்டில் வேறு யாராவது சும்மா இருந்தால், அவர்களிடம் பதில் சொல்லச் சொல்லலாம்.

சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

பதில் தெரியாத இடத்தில் "தெரியாது" என்று மொட்டையாக முடிப்பதைவிட கீழ்க்கிண்ட வழிகளில் முடிக்கலாம்.

முறை.1. "அருமையான கேள்வி, இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்து சொல்கிறேன்" என்று கூறலாம்.

பலன்: ‘பதில் தெரியாவிட்டால் அப்படியே விட வேண்டியதில்லை, யாரிடமாவது விசாரித்து பதில் தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை விதைக்கிறோம்.

முறை. 2. "இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. நூலகப் புத்தகத்தில் எங்காவது படித்தால் தெரிந்து சொல்கிறேன். நீங்களும் எங்காவது படித்தால் எனக்கு சொல்லுங்கள்" என்று சொல்லலாம்.

பலன்.1. ‘பதில் தெரியாவிட்டால் புத்தகத்தில் தேடி தெரிந்துகொள்ளலாம்’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறோம்.

பலன்.2. புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம்.

பலன்.3. தன்னாலும் பதில் கண்டுபிடித்து தந்தைக்கும் வழிகாட்ட முடியும் என்கிற பெருமிதத்தை ஏற்படுத்துகிறோம்.

முறை.3. குழந்தை பைக்கைப் பற்றி கேள்வி கேட்டால், "நீங்கள் கேட்கும் கேள்வி பைக்குடன் சம்பந்தமுடையது. இக்கேள்வியை பைக் பட்டறை வைத்திருக்கும் விசயக்குமார் மாமாவிடம் கேட்டால் பதில் தெரியும்" எனலாம்.

பலன்: ‘கேள்வி எதனுடன் சம்பந்தமுடையது. யாரிடம் கேட்டால் பதில் தெரியும்’ என சிந்திக்க வைக்கிறோம்.

முறை.4.

மேற்கண்ட முறைகளை மாறி மாறிக் கடைபிடிக்கவேண்டும். சிறிது காலம் கழித்து "இந்தக் கேள்விக்கு பதில் தெரியவில்லையே. எப்படித் தெரிந்துகொள்வது" எனக் கேட்டு தேர்வு வையுங்கள். அவர்கள் எவ்வளவு தூரம் தய
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு.

ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே குழந்தைகளுக்கு "அப்பாவே பொய் சொல்கிறார், நாமும் பொய் சொல்வதில் தவறில்லை" என எண்ண வைத்துவிடும்.

"பதில் தெரியாத இடத்தில், தெரியாது என்று சொல்லிவிடுங்கள்". குழந்தைகளிடம் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும்.]

குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும்.ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும்.

அதற்கு பல காரணங்கள் உண்டு.

Saturday 2 November 2013

THE MESSAGE (1977) in Tamil - Full Movie

'' THE MESSAGE'' IN TAMIL தி மெசேஜ் தமிழில் The film follows Muhammad starting with Islam's beginnings in Mecca in which the Muslims are persecuted for their beliefs, the exodus to Medina, and ending with the Muslims' triumphant return to Mecca. A number of crucial events, such as the Battle of Badr and Battle of Uhud are depicted, and the majority of the story is told from the point-of-view of peripheral individuals such as Hamza ibn `Abd al-Muttalib (Muhammad's uncle), Bilal and Zaid (Two of the Prophet's close companions), and on the other side Abu Sufyan (the leader of Mecca) and his wife Hind bint Utbah (enemies of Islam who later become Muslims themselves).

Friday 1 November 2013

பித்அத்களை ஒழிப்பதற்கான வழிமுறைகள் 03

தொடர்ச்சி…..

4. ஒழித்த பித்அத்துக்குப் பிரதியீடாக அதனை விடச் சிறந்த ஒன்றை வழங்க முயல்தல்

சமூகத்திலிருந்து ஒரு பித்அத்தைக்களையும் வேளையில் அதற்குப் பிரதியீடாக ஷரீஅத் கூறும் ஒன்றை முன்வைக்க முயல வேண்டும். ஒரு பித்அத்தில் ஏதாவது நன்மை இருப்பின் அதனை ஒழிக்கும்போது அதற்குப் பகரமாக முடியுமானவரை ஷரீஆ அனுமதிக்கும் ஒரு நற்கரு மத்தை முன்வைக்க முயல வேண்டும். உள்ளங்கள் எப்பொழுதும் ஒன்றைப் பிரதியீடாகப் பெறாமல் ஒன்றை விடாது. ஒருவர் ஒரு நன்மையை விடுவதாயின் அதை ஒத்த ஒன்றையோ அல்லது அதனைவிடச் சிறந்த ஒன்றையோ பெற்ற பின்னரே அதனை விட வேண்டும், என்று கூறும் இமாம் இப்னு தைமிய்யா, தொடர்ந்து பித்அத்களைச் செய்வோர் குறைகூறப்பட வேண்டியவர்களாகவும் குற்றம் காணப்பட வேண்டியவர்களாகவும் இருப்பது போலவே நபிகளாரின் ஸுன்னாக்களை விடுவோரும் செயற்படுத்தாதோரும் கண்டிக்கத்தக்கவர்களாகவே இருக்கின்றனர் எனக் குறிப்பிடுகின்றார்.