Monday 31 December 2012

விசாரிக்கப்படுவதற்கு முன்னர் விசாரித்துக் கொள்வோம்



ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.
 ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு - உங்களது நினைவுக்குச் சில துளிகள் :-

Ö              அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா?
Ö              ஐங்காலத் தொழுகைகளை பள்ளிவாசலில் வைத்து, முதல் ஜமாஅத்துடன் நிறைவேற்றினீர்களா?
Ö              இன்றைய தினம் திருமறையில் இருந்து சில வசனங்களை ஓதினீர்களா?
Ö              ஒவ்வொரு தொழுகையின் முடிவிலும் அல்லாஹ்வின் சில திருநாமங்களை (திக்ருகளை)த் துதித்தீர்களா?
Ö              தொழுகைக்கு முன்பும் அல்லது பின்பும் உள்ள சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றினீர்களா?
Ö              தொழுகையின் பொழுது நீங்கள் ஓதக் கூடிய வசனங்களின் பொருள்களை விளங்கி ஓதினீர்களா?
Ö              மரணத்தையும், மரணத்திற்குப்பின் உள்ள விசாரணை நாள் பற்றியும் நினைவு கூர்ந்தீர்களா?
Ö              மறுமைத் தீர்ப்பு நாள் பற்றியும், அந்த நாளின் கடுமை பற்றியும் நினைத்துப் பார்த்தீர்களா?

Saturday 29 December 2012

Before You invite the ENGLISH (CHRIST) NEW YEAR


2:208   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
2:208நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

Tuesday 18 December 2012

This very useful for beginners in learning Arabic language

Please click this link Arabic Language Course Index to start the lesson. If you cannot read the Arabic script then please complete the Arabic Reading Course before starting this course.

Thursday 13 December 2012

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)

அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)

இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)

இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்
அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்
நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

Sunday 9 December 2012

அநியாயம் செய்யாதீர்கள், பாதிக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!

உலகில் வாழ்கின்ற காலத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவியாக வாழ்வது மனிதனின் பண்பாக இருக்கிறது.அந்தப் பண்பு அனைவரிடத்திலும் அனைத்து சந்தர்பங்களிலும் ஏற்படுவதில்லை.
சிலர் மற்றவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அநியாயம் செய்து விடுகிறார்கள்.அப்படி அநியாயம் செய்வோரில் பெரும்பாலானோர் அநியாயத்தின் விபரீதத்தை புரிந்து கொள்வதில்லை.
அதன் விபரீதம் நமக்குத் தெரிந்தால் அடுத்த மனிதனுக்கு அநியாயம் செய்வதை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முறை முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள்; அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று கூறினார்கள். (புகாரி : 1401)
அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.
பாதிக்கப் பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை.பாதிக்கப் பட்டவன் காபிராக இருந்தாலும் சரியே!
பாதிக்கப் பட்டவன் எப்படி அல்லாஹ்விடம் கேட்கிறானோ அப்படியே அல்லாஹ்வும் அதனை ஏற்றுக் கொள்வான்.
அதாவது ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூ கதாதா என்பவருக்கெதிராக செய்த துஆ அவர் எப்படி அல்லாஹ்விடம் கேட்டாரோ அப்படியே பலித்தது.

Sunday 2 December 2012

குழந்தைகளை நெறிப்படுத்துவதில்தண்டணைகளின் பங்கு


“உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனை கள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும்.
நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இருக்கும் மானசீக உறவுக்குத் தடையாக இருக்கின்றனர். உதாரணமாக, தந்தை அடிக்க முற்பட்டால் உடனே 555 இற்கு போன் செய்தால் காவல் துறை வீட்டில் வந்து நிற்கும் என்று சட்டம் போட்டால் பெற்றோர் எப்படி பிள்ளைகளைத் திருத்த முடியும். பெற்றோருக்குப் பிள்ளைகள் விடயத்தில் இருக்கும் உரிமைகள் என்ன? என்ற கேள்வி எழும்.

இஸ்ரேல் தோன்றிய இழி வரலாறு


யூதர்கள் நபி ஸகரிய்யா (அலை) அவர்களைக் கொலை செய்கிறார்கள்
மகன் யஹ்யா (அலை) அவர்களையும் கொலை செய்கிறார்கள்.
பின்னர் நபி ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
கி.பி. 70ல் உரோம ஆட்சிக்கெதிராக யூதர்கள் புரட்சி செய்கிறார்கள். உரோமச் சக்கரவர்த்தி டைடஸ், அவர்களை அடக்கி, நாட்டை விட்டும் துரத்தி விடுகிறார். யூதர்களின் நீண்ட கால (2000 வருட) வெளியேற்றம்  இதிலிருந்து ஆரம்பிக்கிறது.
கி.பி.118-138ல் யூதர்கள் மீள வர அனுமதிக்கப்பட்டும், அவர்கள் வந்து கி.பி.133 ல் மீண்டும் புரட்சி செய்கிறார்கள். இதனால் பலஸ்தீன் நகரம் முற்றாக அழிக்கப்படுகிறது. யூதர்கள் விரட்டப்பட்டதோடு அடிமைகளாகவும் விற்கப்படுகின்றார்கள்.
கி.பி. 638ல் அரபு முஸ்லிம்கள் ஃபலஸ்தீனத்தைக் கைப்பற்றுகிறார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து ஜெரூஸத்தின் திறவு கோலைக் கையளிக்கிறார்கள். இடையில் (1099 முதல் 1187 வரை) சிலுவை யுத்த வீரர்களின் ஆட்சிக்கு ஜெருஸலம் உட்படுத்தப்பட்டது தவிர்ந்த ஏனைய காலங்களில், உதுமானிய சாம்ராஜ்யம் (இறுதி கிலாபத்) முடிவுக்கு வரும் வரை (1924) முஸ்லிம்களின் பூமியாக பலஸ்தீனம் இருந்து வந்தது.
கி.பி. 1896ல் ஐரோப்பிய நாடுகளில் யூத இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் விளைவை முன்னிறுத்தி எழுத்தாளன் தியோடர் ஹேர்ஸல், யூதர்களுக்கான ஒரு பூமி தேவை என வலியுறுத்தினான். இதன் அடிப்படையில் சுவிட்ஸர்லாந்தில் யூதத்தலைவர்களும் தனவந்தர்களும், அறிஞர்களும் ஒன்று கூடி முதலாவது ஸியோனிச காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டி,பலஸ்தீனில் யூத தாயகம் அமைவது பற்றி முன்மொழிந்தனர்.

ஊடகத்துறையின் அவசியமும் முஸ்லிம்களின் நிலையும்!

ஊடகம் என்பது தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பு சாதனமாகும்.
இவற்றுள் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய உலகில் ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் உயிர்ப்பையும் நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப்  பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் பொய்களையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், “ஊடகப் போர்” என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.
முஸ்லிம்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேற்கத்திய ஊடகங்களும் கீழக்கத்திய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.

Monday 26 November 2012

Forward this important message to as many people as possible.

1. The Holy Prophet (Sallalahu Alaihi Wasallam) said, Stop doing everything during the Azaan (Call for prayer), even reading the Quran.
Please always remember to use correct terminology and words in Islam as Arabic words are very sensitive unlike English and other languages.
2. Never say Mosque - say " MASJID " The meaning of Mosque is Mosquitoes.
3. Never write Mecca - It means "House of wines" so, write "MAKKAH"
4. Don't write the name of Our Prophet (S.A.W) or your name In short as "MOHD or MD." It means "The dog with big mouth" so write " MOHAMMAD" or " MUHAMMAD"

May ALLAH Subhanawataalah accept our deeds in spreading this mail and all other genuine Islamic information.
" Your deeds are the provocation of your thoughts, so always fill your mind with good and positive thoughts "

Do you know the what the "heart beat says"? - that it is RUB RUB. RUB

Scientist has proved that the sound which comes from heart beat is LUB DUB.
But now they analyze that it is RABB RABB. RABB is Arabic word and it stands for the LORD who has created and owns everything in this Universe, He is Most Merciful & beneficent ALLAH. So it means every heart beat says ALLAH ALLAH.

Heart Sound
Compare with
Normal Heart Sound (441K)

http://www.dundee.ac.uk/medther/Cardiology/prub.htm        <  Click this Link

Techniques - Heart Sounds & Murmurs Exam - Physical Diagnosis ...

The sounds of pleural and pericardial friction rubs are often mistaken for ... One systolic sound and two diastolic sounds (3 component rub) (systolic sound ...

http://depts.washington.edu/physdx/heart/tech5.html      <  Click this Link



யுக முடிவு (கியாமத்) நாளின் மாபெரும் பத்து அடையாளங்கள் & 50 Signs of the Day of Judgment

மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விசயங்களை குறிப்பிட்டார்கள்

  •   புகை மூட்டம்
  •   தஜ்ஜால்
  •   (அதிசய) பிராணி
  •   சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
  •   ஈசா (அலை) இறங்கி வருவது
  •   யஹ்சூஜ், மக்சூஜ்
  •   கிழக்கே ஒரு பூகம்பம்
  •   மேற்கே ஒரு பூகம்பம்
  •   அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
  •   இறுதியாக ஏமனில் இருந்து புறப்படும் தீ பிழம்பு மக்களை விரட்டி சென்று ஒன்று சேர்த்தல்

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!

1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

Friday 23 November 2012

Basic Securities on facebook....

Facebook Tutorial…
  1. The moment you create a new facebook account, you have to log in with an email account. The email account you use is a seprate entity for creating facebook account so the password u create for facebook should be different from your existing email account……
For eg. I create a account with rakshittandon@gmail.com on facebook so my Gmail password is different and Facebook account password will be different

  1. The moment you create your account you are invited to update your profile with basic details and photos.
  2. There is a option on the facebook screen on right hand corner Account-> where there is a sub menu option called PRIVACY SETTINGS…..

Sunday 18 November 2012

நபிகளாரின் வருகை -Dr KVS Habib Muhammad

இஸ்லாமும் சினிமாவும் - Q&A by Dr.K.V.S.Habib Mohamed

மாநபியின் இறுதிப் பேருரை Dr.K.V.S. Habib Mohamed

நாட்டுப் பற்றா ? மதப் பற்றா ?

குழந்தை இல்லாதது சதியா ?விதியா ?

பெண்களுக்கு விவாகரத்து உரிமை..

குடும்ப வாழ்வில் அமைதி பொங்க..

Thursday 15 November 2012

இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்

இஸ்லாத்தை பற்றி  உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம் கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.

இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா

இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.
இஸ்லாம் பற்றி பெருமையாக அண்ணாவும் சொல்றாங்க கேளுங்க...

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு - உரை: ஈ.வெ.ரா. பெரியார்

இஸ்லாம் பற்றி பெருமையாக பெரியாரும் சொல்றாங்க கேளுங்க...
இஸ்லாம் பற்றி பெருமையாக நாங்கள் சொன்னால்....அய்யோ இவர்கள் மதவாதம் பேசுகிறார்கள் என்று ஓலமிடும் டார்வின் மதத்தினரே....
இதையும் கொஞ்சம் செவிமெடுங்கள். இது சத்தியமாக எந்த இஸ்லாமியரும் பேசிய பேச்சல்ல....மாறாக, கடவுளை கும்பிடுகிறவன் காட்டுமிராண்டி, கல்லை வணங்குபவன் முட்டாள் என்றெல்லாம் நாத்திக பிரச்சாரம் செய்த தந்தை பெரியாரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன பேரறிஞர் அண்ணாவும் பேசிய பேச்சுக்களை கேளுங்கள்.

Tuesday 13 November 2012

காபி மற்றும் தேநீர்

காபி என்பது எல்லோராலும் மிகவும் விரும்பிக் குடிக்கப்படும் பானம். இதில் கலந்திருக்கும் இரசாயனப் பொருள் கஃபின் (Caffeine) இதனால் ஏற்படும் சீர்கேடுகள் பலப்பல. காலையில் கண் விழித்த உடனேயே காபி, தேநீர் போன்றவைகள் மூலம் இரசாயன ஆபத்துக்களை நாம் மனம் விரும்பி ஏற்றுக் கொள்கிறோம்.

விழித்துக் கொள்வோம்…!

ஒரு மனிதனுக்கு மனம்தான் மிகவும் முக்கியம். இதைத்தான் எண்ணத்தைப் போல வாழ்க்கைன்னு சொல்லியிருக்காங்க. அந்த மனதை எப்படி நன்றாக வைத்துக் கொள்வது? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான மனநிலையும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால்தான் பல தவறுகள் நடக்கின்றன. ஒரு தவறு நடந்து விட்டால் தப்பு செய்தவனை மட்டும் குறை கூறவோ பழி போடவோ முடியாது. அதற்கு காரணமானவர்களையும் யோசிக்க வேண்டும்.

புகை பிடிப்பதால் என்னதான் ஆகி விடப்போகிறது! – கொஞ்சம் பார்ப்போமா?

பல்வேறு நோய்களை உருவாக்கி, உயிருக்கே உலை வைக்கும் புகையைப் பற்றிய சில உண்மைகள் :
1. ஒவ்வொரு முறை புகை பிடிக்கும்போதும், உங்கள் வாழ்நாளில் இருந்து 1 மணி நேரத்தை இழந்து கொண்டிருக்கிறீர்கள் (உதாரணமாக, ஒரு நாளைக்கு 5 சிகரெட் வீதம் ஒரு வாரத்திற்கு பிடிக்கும் புகை, உங்கள் மொத்த வாழ்நாளில் இருந்து 1 நாளை குறைத்து விடுகிறது).
2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்களும் அடங்கும்.

சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள்!

காலை உணவை தவிர்க்காதீர்கள்!
வேலைப்பளு அது இதுவென்று காலையில் சாப்பிடாமல் இருந்து விடுகிற வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் காலைச் சாப்பாட்டை இப்படி தவற விடுவது நல்லதல்ல என்பது அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பொது மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 30 ஆயிரம் ஆண்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
காலையில் சாப்பிடுபவர்களை விட சாப்பிடாதவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகம் என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட 29 ஆயிரத்து 206 ஆண்களில் ஒருவருக்குகூட ஆரம்பத்தில் நீரிழிவு தாக்கவில்லை. நீரிழிவு வரக்கூடாது என நினைக்கிற ஆண்கள் காலை சாப்பாட்டை தவற விடாமல் இருப்பது நல்லது.

வேப்பிலைக்கு நிகரான கறிவேப்பிலை!

வேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், அடடா.. இது எங்க பாட்டான் சொத்து  என்று விழித்தெழுந்து உலக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கி உரிமையை மீட்டுவந்தோம். வேம்பின் அருமையை மறந்துபோனதன் விளைவுதான் இது. இதே நிலைமை வெகு விரைவில் கறிவேப்பிலைக்கும் வரலாம்!

ரசாயன மயம்

தொழில் மற்றும் சுற்றுச் சூழல் மருத்துவ சஞ்சிகையில் (Ocupational and Environmental Medicine Journal) வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மை என்னவெனில் ரொட்டி, பன், பிஸ்ஸா, போன்ற பொருட்களை விரைவில் தயாரிக்க அவைகளின் மூலப் பொருளான மைதாவில் ஆல்பா அமைலேஸ் (ALFA AMYLASE) என்ற ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த நொதிப் பொருளின் தொடர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டு இரைப்பு, ஆஸ்துமா, கண் எரிச்சல் மற்றும் தோல் சிவத்தல் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். (ஆதாரம் the sunday review, april 18.1998) தொடர்ந்து இவ்வுணவுப் பொருட்களை உட்கொள்கிறவர்களின் நிலை என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.

நிலத்தடி நீர் மாசு!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை கலந்து இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tuesday 16 October 2012

குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதன் அடிப்படைகள்

குழந்தைகளுக்கான முஸ்லிம் பெயர்கள்
Download this book in PDF


இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குபெயர் சூட்டுவதற்கு மக்கள் மிகப் பெரும்சிரத்தையை எடுத்துக் கொள்கின்றனர்பெயர்சூட்டுவதற்குரிய சில அடிப்படையான மார்க்கச்சட்டங்களை தெரிந்து கொண்டால் மிக எளிதாகநாம் முடிவெடுத்து விடலாம்நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமானபெயர்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்உங்கள் பெயர்களில்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதுஅப்துல்லாஹ் (அல்லாஹ்வின்அடிமைமற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமைஆகியவையாகும்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (­லிநூல் : முஸ்லி­ம் (4320)

இறைவனுக்கு இணையானவராக காட்டும் வகையில் பெயர் சூட்டுவதைமிகக்கடுமையாக கண்டித்துள்ளார்கள்மேலும் இவ்வாறு பெயர் வைத்துக்கொண்டவர்களுக்கு மறுமையில் மிகப் பெரும் இழிவு ஏற்படும் என்றும்எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்மறுமை நாளில்அல்லாஹ்வின் கோபத்துக்குரியஅவனிடம் மிகவும் கேவலமான மனிதர்யாரெனில், (உலகில்) 'மன்னாதி மன்னன்எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம்.அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்தமன்னன் வேறுயாருமில்லை.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி­) நூல் : முஸ்லி­ம் (4339) புகாரி (6205)

என்னுடைய தந்தையின் பெயர் அறியாமைக் காலத்தில் ''அஸீஸ்'' (யாவற்றையும் மிகைப்பவன்என்று இருந்ததுஅவருக்கு நபியவர்கள் ''அப்துர்ரஹ்மான்'' (அளவற்ற அருளாளனின் அடிமைஎன்று பெயர் சூட்டினார்கள்.அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ சப்ரா (ரலி­) நூல் : அஹ்மத் (16944)