Thursday 26 July 2012

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் (Download PDF book)



எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ

ஆக்கம்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர்: ஸனாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா, சவூதி அரேபியா).
Download PDF format book

Saturday 21 July 2012

ரமலானும் ஈமானும்……



அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்: ”யார் ரமலானில் நம்பிக்கையுடனும்  நன்மையை எதிர் பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” நூல் : புகாரி 1901

இன்று நம்மில் ஒவ்வொருவரும் வருடந்தோறும் நோன்பு வைக்கிறோம். ஸஹர் நேரத்தில் உணவு உண்கிறோம். பகலில் ஒரு மிடரு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு வைக்கிறோம். ஆனால் நம்பிக்கையோடு நோன்பு வைக்க வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்களே; எந்த மாதிரி நம்பிக்கையை ஒரு விசுவாசி வைக்க வேண்டும்? அந்த நம்பிக்கை நம்மிடம் உண்டா?ஷஅபான் மாதம் நம்மைவிட்டு விடைபெறும் போது நம்முடைய உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சிஊடுருவுகிறது. நோன்பு முடிந்தால் பெருநாள் அப்பொழுது புத்தம் புதிய ஆடைகளில் நாம் வலம் வரலாம். நாவிற்கு சுவையூட்டும் ஆகாரங்கள் உண்ணலாம் என்ற ஆனந்தம் தோன்றக்கூடாது. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”ரமலான் மாதம் வந்து விட்டால்சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகிறது. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகிறது. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். நூல் : புகாரி 1898இ 1899

இந்த நம்பிக்கை நம்மிடம் வேண்டும்இ நமது குழந்தைகளிடம் நாம் ”சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் வருகிறது. அந்த சுவனத்தில் பூஞ்சோலைகள்இ நீரருவிகள்இ வித விதமான மலர்களுடன் கூடிய பழங்கள்இ முத்துக்களும் பவழங்களும் பதிக்கப்பட்ட இருக்கைகள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான். அவனுக்கு பிரியமானவர்களாக நாம் மாறினால் அவற்றை அல்லாஹ் நமக்கு பரிசாக வழங்குவான்” என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

சதா கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்,காலத்தை வீணடிக்கும் இளைஞர், இளைஞிகளிடம் ”ஷைத்தான்கள் விலங்கிடப்படும் ஒரு மாதம் நமக்கு வர உள்ளது. வீணாய்ப்போகும் காரியங்களில் நேரத்தை வீணடிக்காமல் அல்லாஹ் ஷைத்தான்களுக்கு விலங்கிடும் போது இந்த ரமலானிலிருந்து ஷைத்தானியத்தனமான காரியங்களிலிருந்து நீங்களும் விலகியிருங்கள்” என்று நாம் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அதே போல் இல்லங்களில் தொலைக்காட்சிகளில் தொலைந்து போகும் நல் இல்லத்து மங்கையரிடம் ரமலானின் சங்கையை எடுத்துரைத்து அவர்களின் ஈமானை நாம் வலுப்படுத்த வேண்டும். இதெல்லாம் செய்வதற்கு முன்னால் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத்தினராகிய நாம் அவருடைய பொன்மொழிகள் மீது அதீத நம்பிக்கை உடையவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது நாம் ஈமானிய வலுவுள்ளோராக ஆவோம். இவ்வாறான நம்பிக்கை ஈமான் நமக்குள் தோன்றும் போது அதன்பிரதிபலிப்பாக நம்மிடம் நல்லமாற்றங்கள் நிகழ வேண்டும்.

Sunday 15 July 2012

அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து




நீங்கள் வாழ்வில் நல்ல வாய்ப்பை தவறவிட நேர்ந்தால்
கண்களுக்கு கண்ணீர் திரையிட்டுக் கொள்ளாதீர்கள்......
அதன் மூலம் உங்கள் முன்னே இருக்கும் இன்னொரு
நல்ல வாய்ப்பும் தெரியாமல் போகக்கூடும் ......

பிறரது வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிக எளிது.
ஆனால் நம் வேலையில் குற்றம் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.....
நீங்கள் நடக்கும் கட்டாந்தரைக்கு கம்பளம் விரிக்க நினைப்பதை விட
உங்கள் கால்களுக்கு செருப்பு போட்டுக்கொள்வது நன்று ......

தவறுகள் நிகழ்கையில் வலி மிகுந்ததாகும்.....
காலப்போக்கில் தவறுகளால் கண்ட படிப்பினைகள்
உங்களின் வெற்றிக்கு பாதை வகுத்து கொடுக்கும்......

உங்களை எக்காரணம் கொண்டும் உலகில் எவருடனும்
ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.....
அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் அவமரியாதையாகும்.....

ஒவ்வொரு வெற்றிபெற்ற மனிதனுக்கு பின்னாலும்
ஒரு வலிமிகுந்த உண்மைக் கதை இருக்கும்......
ஒவ்வொரு வலிமிகுந்த கதைக்கும் மகிழ்ச்சியான,
வெற்றிகரமான முடிவே இருக்கும்.....
வலியை ஏற்றுக்கொள்
வெற்றியை எட்டிப்பிடி.....

தோல்வி அடைகையில் உறுதியாயிறு
வெற்றி பெறுகையில் அமைதியாயிரு.....
தங்கத்தை உருக்கினால் தான் நகை செய்ய முடியும்.
பித்தளையை அடித்தால் தான் கம்பி செய்ய முடியும்.கல்லை செதுக்கினால் தான் சிலை செய்ய முடியும்.
அதீத துயரம் அனுபவித்தவனுக்கே வாழ்கையின் அருமை தெரியும்.

ஒரு தவறான தொடக்கத்தை மீண்டும் பின்னால்
சென்று திருத்துவது கடினம்
ஆனால் யார் வேண்டுமானாலும் திட்டமிட்டு செயலாற்றுவது
மூலம் வெற்றியை அடையலாம்......

தீர்வுகாணக் கூடிய சோதனை குறித்து
கவலை கொள்ளத் தேவையில்லை......
தீர்வேயில்லாத சோதனை குறித்து
கவலை கொண்டு ஆகப்போவது ஏதுமில்லை.....

சாவியில்லாத பூட்டுக்களை யாரும் தயாரிப்பதில்லை.
அது போலவே
தீர்வே இல்லாத சோதனைகளை
கடவுள் மனிதனுக்கு கொடுப்பதில்லை......

முகத்தை ஒளித்துக் கொள்வதனால் எதுவும் ஆகப்போவதில்லை.
ஆனால்
பிரச்சனையை முகம் கொண்டு எதிர்நோக்குவதால்
எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கின்றன...........
யாரை பற்றியும் குற்றம் சொல்வதைவிட
நம்மில் குற்றம் இருந்தால் அதை மாற்றிக்
கொள்வது மூலம் சமாதானம் கிடைக்கிறது .....

Friday 13 July 2012

'God particle': CERN scientists find new particle, probably the Higgs boson



http://articles.timesofindia.indiatimes.com/2012-07-04/science/32536682_1_higgs-idea-higgs-particle-higgs-boson
(Scientists at Europe's…)
GENEVA: Scientists at Europe's CERN research centre have found a new subatomic particle that could be the Higgs boson, the basic building block of the universe.
"We have indeed discovered a particle consistent with the Higgs boson," John Womersley, head of a British public research body, told journalists and scientists in London on Wednesday.
"These results mark a significant breakthrough in our understanding of the fundamental laws that govern the universe."
Joe Incandela, spokesman for one of the two teams hunting for the Higgs particle told an audience at CERN near Geneva: "This is a preliminary result, but we think it's very strong and very solid."
CERN's director general Rolph Heuer said: "As a layman, I would say I think we have it."
Addressing the scientists assembled in the CERN auditorium, Heuer asked: "Would you agree?" They burst into applause.
Peter Higgs, the 83-year-old British physicist who proposed the existence of the Higgs boson in the 1960s, was at CERN to welcome the news. Clearly overwhelmed, his eyes brimming, he told the symposium: "It is an incredible thing that it has happened in my lifetime."
Universal theory
The Higgs theory explains how particles clumped together to form stars, planets and life itself.
Without the Higgs particle, the particles that make up the universe would have remained like a soup, the theory goes.
It is the last undiscovered piece of the Standard Model that describes the fundamental make-up of the universe. The model is for physicists what the theory of evolution is for biologists.
What scientists do not yet know from the latest findings is whether the particle they have discovered is the Higgs boson as described by the Standard Model. It could also be a variant of the Higgs idea or an entirely new subatomic particle that could force a rethink on the fundamental structure of matter.
The last two possibilities are, in scientific terms, the most exciting.
Packed audiences of particle physicists, journalists, students and even politicians filled conference rooms in Geneva and London to hear the announcement.
Despite the excitement, physicists cautioned that there was still much to learn.
"We still much we don't know about particles - this is only the beginning of a new journey. We have closed one chapter and opened another," Peter Knight of Britain's Institute of Physics said.
Oliver Buchmueller, a senior physicist on one of the research teams, told Reuters: "If I were a betting man, I would bet that it is the Higgs.
"But we can't yet say that definitely yet. It is very much a smoking duck that walks and quacks like the Higgs. But we now have to open it up and look inside before we can say that it is indeed the Higgs."
Higgs called it a great achievement for the Large Hadron Collider, the 27-km (17-mile) long particle accelerator built in a tunnel underneath the French-Swiss border where experiments to search for the Higgs boson have taken place.
In a statement, he added: "I never expected this to happen in my lifetime and shall be asking my family to put some champagne in the fridge."

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!


கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.


இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.


Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.


இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.


ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.


இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.


ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.


இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.


இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.


அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.


ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)


பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.


இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.


ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.


CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.


 

Sunday 8 July 2012

The Orphan in Islamic Law

Monday 2 July 2012

கையடக்கத் தொலைபேசிகளும் அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்

 எழுதியவர்/பதிந்தவர்/உரை

- M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி)
நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும்.
நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது.
இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக உள்ளது. மனிதன் வாழ்கின்ற சூழலில் அவன் எதிர்நோக்கின்ற அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தேவையான சட்டதிட்டங்களை அதில் காணலாம். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதனை எப்போதும் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இஸ்லாம், எல்லா சட்டதிட்டங்களுக்கும் அடிப்படையாக காரணங்களை வகுத்துள்ளது. அத்தகைய காரணங்கள் எவ்விடயத்தை கையாளும் போதும் கவனிக்கப்பட வேண்டும். அவை நபியவர்கள் காலத்தில் இல்லாத கழியுகத்தில் காணப்படக்கூடிய எச்சாதனத்துடனாவது சம்பந்தப்பட்டிருந்தால், குறித்த அச்சாதனத்தின் உபயோகத்தின் போது அவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இன்று கையடக்கத் தொலைபேசி எனும் சாதனம் சமுகத்தில் பலராலும் உபயோகிக்கப்பட்டு வருகின்றது. எத்தனை பேர் அவற்றை உபயோகித்தாலும் அவை உரிய முறையில் உபயோகிக்கப்படுகின்றனவா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. நிச்சயமாக இல்லை, கையடக்கத்தொலைபேசிகளில் உண்டான பல மோசமான விளைவுகள் இதற்குச் சாட்சியாக உள்ளன. இறை நிராகரிப்பாளர்களை ஒரு புறம் விடுங்கள், நாங்கள் மறுமைக்காக வாழ்கின்றவர்கள். நம்முடைய வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வது எமது கடமை. இதனை கருத்தில் கொண்டு நான் கூற இருக்கின்ற சில ஆலோசளைகளை சற்று கூர்ந்து கவனியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பவர்களுக்குத் தேவையான உபதேசங்கள் தொடர்பாக பல அறிஞர்கள் தங்கள் நூட்களில் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய நூட்களில் அறபு மொழியைக் கற்றறிந்தவர்களுக்கு வாசிக்கத்தக்க சிறந்த நூலாக, பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்களினால் எழுதப்பட்ட அதபுல் ஹாதிப் என்ற நூலை சிபாரிசு செய்கிறேன்.
கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்கான சில உபதேசங்கள்
  • கையடக்கத்தொலைபேசிகளில் நாம் மேற்கொள்ளக்கூடிய காரியங்களில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக நாம் அது விடயத்தில் அல்லாஹ்விடத்தில் பொறுப்புதாரிகளாக உள்ளோம். நாம் எமது பொறுப்புக்களைப்பற்றி விசாரிக்கப்படவுள்ளோம் என்பதை என்றும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் பேசக்கூடிய எவ்வகையான வார்த்தையாக இருந்தாலும் அவ்வார்த்தைகளை எழுதுவதற்குத் தயாராக உள்ள வானவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதனை மனத்தில் கொள்ள வேண்டும்.
  • மேலும், நாம் உலகில் வாழும் காலங்களில் இத்தகைய சாதனங்களின் மூலம் ஒருவருடைய சொத்து, உயிர், மானம் போன்றவை பறிபோவதற்குக் காரணமாக இருப்போம் என்றால், நிச்சயமாக மறுமை நாளில் எமக்கு ஈடேற்றம் கிடைக்கும் என நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.
  • அது மாத்திரமின்றி, இத்தகைய சாதனங்களைத் தவறான வழிகளில் உபயோகிப்பது, இஸ்லாத்தின் அறநெறிகளைப் பாழ்படுத்திய குற்றத்திக்கு உள்ளாக்கிவிடும் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • கையடக்கத்தொலைபேசிகள் மூலம் யாருக்கும் இடையூறு மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடாது. யாருடனாவது தொடர்பினை ஏற்படுத்த நாடினால் முதலில் அவருடன் கதைப்பதற்கு உகந்த நேரத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும். அதன் போது, குறித்த அந்நபரின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றும் வேளை, மற்றும் வழமையாகப் புரியும் பணிகள் போன்றன கவனிக்கப்பட வேண்டும்.
  • மேலும், நீங்கள் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர் அதற்கு பதிலளிக்காது போனால் அல்லது வழமைக்கு மாற்றமாக தனது பேச்சை சுருக்கிக் கொண்டால், உடனே அவர் மீது தப்பெண்ணம் கொண்டுவிடாது அவர் அவ்வாறு நடந்து கொண்டமைக்கான நியாயமான காரணங்களைத்தேட வேண்டும்.
  • இன்னும், யாருடன் பேசுவதாக இருந்தாலும் ஒழுக்கமாக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். பிறர் மனம் நோகும் விதத்தில் நடந்து கோள்ளக்கூடாது.
  • யாருடனாவது பேச முற்படும் போது அது அவருடைய தொலைபேசி இலக்கம்தானா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இவ்வாறான வழிமுறை பேணப்படாததின் காரணமாக தகாத உறவுகள் உண்டாகி குடும்பங்களுக்கு மத்தியில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
  • நீங்கள் யாருடனாவது கதைக்க முற்படும் போது அல்லது அழைப்புக்கு பதிலளிக்க முற்படும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் ஸலாத்தைக் கொண்டு எம் பேச்சிக்களை ஆரம்பிக்க வேண்டும்.
  • உங்களுடன் அழைப்பினை ஏற்படுத்தியர் சலிப்படையும் அளவுக்கு பேச்சை நீட்டக்கூடாது. ஏனெனில், இவ்வாறு நடந்து கொள்வது ஒருவிதத்தில் உங்களுடன் அழைப்பில் இருப்பவருக்கு இடையூறாகவும் இன்னொரு விதத்தில் உங்களுக்கு அது வீண்விரயமாகவும் அமையும். அப்படி அவசியமான ஒரு விடயத்தை நேரம் எடுத்து கதைக்கவேண்டி ஏற்பட்டால் அழைப்பில் இருப்பவரிடம் அனுமதி எடுத்த பின்பே பேச்சைத் தொடர வேண்டும்.
  • ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும் போது நீங்கள் யாருடன் கதைக்கின்றீர்களோ அவரின் அனுமதியின்றி அவரது பேச்சை பதிவு செய்யவோ அல்லது அதனை பிறர் முன்னிலையில் சத்தமாகக் கேட்க வைப்பதோ தவிர்க்கப்பட வேண்டும்.
  • பேராசிரியர் பக்ர் அபூ ஸைத் அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஒருவரின் பேச்சை அவரது அனுமதியின்றி பதிவு செய்வது அமானித மோசடியாகும். இத்தகைய செயல்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவது அவனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு தொலைபேசியில் பேசப்படும் விடயம் மார்க்கத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ அல்லது உலகத்துடன் தொடர்புடைய அம்சமாகவோ இருக்கலாம்.’ (அதபுல் ஹாதிப் : 28)
  • மற்றோர் இடத்தில்; கூறும் போது, ‘ஒருவரின் அனுமதியின்றி அவரின் பேச்சைப் பதிவு செய்வது ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகமுமாகும். மேலும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பேச்சை பிறருக்கு அனுப்புவது மென்மேலும் மோசடியை அதிகரிக்கச் செய்யும். அத்தோடு அதனில் கூட்டுதல் குறைத்தல் செய்து பதிவு செய்யப்பட்ட பேச்சின் ஒழுங்கில் மாற்றம் செய்வது மிகப் பாரதூரமான குற்றமாகும்.’ (அதபுல் ஹாதிப்: 29,30)
  • பிறருடைய தொலைபேசியை அவரது அனுமதியின்றி எடுப்பதையும், அதனுள் உட்சென்று அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  • நவீன கையடக்கத்தொலைபேசிகளில் காணப்படுகின்ற விஷேட அம்சங்களான கேமரா, வீடியோ, புலூதூத், ரெகோடர் போன்றவற்றை இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் பாவிக்காதிருத்தல். இத்தகைய சாதனங்கள் சரிவரப் பயன்படுத்தப்படாததின் காரணத்தினால் இன்று வீடுகள், பாடசாலைகள், கடைத்தெருக்கள், பொது இடங்கள் அனைத்தும் சீர்கெட்டு இருக்கின்றன.
  • பள்ளிவாசலினுள் பிரவேசிக்கும் போது கையடக்கத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து விட்டு அல்லது சைலன்டில் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். மாற்றமாக அதுவிடயத்தில் கரிசனைகாட்டாமல் தொழுகையில் நுழைந்ததின் பிற்பாடு தொலைபேசி அழைப்புக்கள் வரும் போது தக்வாவைப்பற்றி சிந்திப்பதில் அர்த்தமில்லை. மேலும், இத்தகைய செயல்கள் தொழுகையாளிகளின் சிந்தனைகளைத் திசைதிருப்பக்கூடியனவாகவும் இருக்கின்றன.
  • ஒருவருடன் அழைப்பினை ஏற்படுத்தும் போது அழைப்பில் இருப்பவர் உங்களை யார் என்று இனங்காணத்தவறும் பட்சத்தில் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்தாது தன்னைப்பற்றிய விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை ஜாபிர் (ரழி) அவர்கள் நபியவர்களின் வீடு நோக்கி வந்து அவரை அழைத்த போது, நபியவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டு யார்? என வினவினார்கள். அதற்கு ஜாபிர் (ரழி) அவர்கள், நான் என் பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள் எனது பதிலை வெறுத்தவர்களாக ‘நான், நான்’ என்று கூறிக் கொண்டு என்னை நோக்கி வந்தார்கள். (புகாரி, முஸ்லிம்)
  • முடியுமான அளவு இசையுடன் தொடர்புடைய சமிக்ஞைகளை ரிங்டொன்னின் (Ringtone) போது உபயோகிப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஆலோசனை சபைகள், மார்க்க உபன்யாசம் நடைபெறும் இடங்கள் போன்ற முக்கிய கூட்டங்களின் போது கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்காதிருத்தல்.
  • கண்ட கண்ட இடங்களில் தொலைபேசியை வைக்காதிருத்தல்.
  • தொலைபேசிகளின் மூலம் குறுந்தகவல்களைப் பரிமாறும் போது ஒழுக்கமான நடைமுறைகளைக் கையாளல்.
  • குறுந்தகவல்களின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களை உறுதி செய்து கொள்ளல்.
  • உங்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கக்கூடிய மோசமான குறுந்தவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் உடனடியாக அழித்துவிட வேண்டும். மேலும், அப்படியான தகவல்களை உங்களுக்குத் தந்தவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.
  • தொலைபேசியில் நேரத்தை வீணடிக்காதிருத்தல். அவற்றில் பதிவு செய்யப்பட்ட விடயங்களைப் பார்வையிடுவதினாலும் அதில் காணப்படக்கூடிய விளையாட்டுக்களை விளையாடுவதினாலும் பிரயோசனமின்றி நேரம் கழிகின்றது. இது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல.
  • தாவுத் அத்தாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘உன்னுடைய இரட்சகனின் சிந்தனையை விட்டும் உன்னைத் திசைதிருப்பக்கூடிய அனைத்தும் கெட்ட விளைவை ஏற்படுத்தக் கூடியன’ என்கிறார்.
  • நாம் உபயோகிக்கக்கூடிய தொலைபேசிகளைக் கொண்டு பெருமை பாராட்டாதிருத்தல். மேலும், பிறரது தொலைபேசிகளைக் கொண்டு மக்கள் முன்னிலையில் தன்னை அடையாளப்படுத்தாதிருத்தல்.
  • இசை, பாடல், திரைப்படம், புகைப்படங்கள் போன்றவற்றை கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்வதும், அவற்றை நண்பர்களுக்கு மத்தியில் பரிமாறுவதும் இஸ்லாம் தடை செய்யும் அம்சங்களாகும்.
  • ஒவ்வொரு பொறுப்புதாரரும் தனக்குக் கீழால் உள்ளவர்கள் எப்படியான வழிகளில் தம் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். தன் பொறுப்பில் இருப்பவர்களில் எவர்களுக்கு கையடக்கத்தெலைபேசிகளை உபயோகிப்பதற்கு தகுதியிருக்கின்றது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.
  • இப்படி கையடக்கத்தொலைபேசியின் உபயோகத்துடன் தொடர்புடைய பல ஒழுக்க விழுமியங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து நாம் உபயோகிக்கின்ற கையடக்கத் தொலைபேசிகளை அல்லாஹ் விரும்பக்கூடிய வழிகளில் பயன்படுத்தி, அவற்றில் அமானித்தைப் பேணக்கூடியர்களாக நானும் நீங்களும் மாறுவோமாக!

உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.

விபத்து (விழிப்புணர்வு நாடகம்)

எழுதியவர்/பதிந்தவர்/உரை
ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்…. அதுக்குள்ள என்ன ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான்.
வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர் ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ கொரல்லா நீல நிற காரை டிரைவ் செய்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரின் துணைவி. அவரைவிட கொஞ்சம் உயரம்போல் தெரிந்தாலும் கண்ணியமாக பர்தா அணிந்திருந்தார். இரண்டு பிள்ளைகள். ஜாம்ஜும் சென்டரில் சற்று முன்தான் பர்சேஸ் முடிந்திருந்தது. பர்ஸ் கனம் குறைந்து டிக்கி கணம் அதிகரித்திருக்க வேண்டும்.
இந்த எளவெடுத்த காரை மாத்ரீங்களா. உங்களோட வந்தவனெல்லாம் பெரிய பெரிய லாரியெல்லாம் வாங்கிட்டானுங்க. நீங்க ஏன்தான் இத கட்டி அலுவுரீங்களோன்னு தெரியல.
ம்…ஏன் சொல்லமாட்டே? அட கைக்கூலி வாங்கக்கூடாது வாணாம். சரி மாப்ளைக்கு அன்பா ஒரு சைக்கிளாவது வாங்கித்தராங்களா? உங்க வீட்ல. டவுன் பஸ்ல போய்கிட்டிருந்த நீ… பேசற….ம்
ம்…உம். போதும்! போதும்! நீங்க எழுத்தப் பார்த்து ஒழுங்கா ஓதுங்க! (ரோட்ட பார்த்து ஓட்டுங்க).
ஏங்க இப்டி ஓட்றீங்க. பெரிய டைலரல்லாம் வருது.
ஏய்! அது டைலர் இல்ல. அவன் என்ன சொக்காவா தைச்சிக்கிட்டிருக்கான் ரோட்ல. “ட்ரைலர்”. எங்கே சொல்லு ட்..ரை…ல…ர்
வாப்பா… ட்ரைலர் ஸ்பெல்லிங் எனக்கு தெரியுமே. நாஞ்சொல்றேன் டீ…ஆர்…ஏ…ஐ…எல்…ஈ…ஆர். ட்ரைலர் என்று பின்சீட்டு மூத்த மகன் பாடம் நடத்தினான்.

குழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
குழந்தைகளை நல்வழிப்படுத்தி இஸ்லாமிய நிழலில் வளர்த்தெடுப்பது என்பது இந்த நவீன யுகத்தில் பாரிய பொறுப்பு வாய்ந்த பணியாகவே திகழ்கின்றது. குழந்தைகளிடம் ஆதிக்கம் செலுத்தும் வெளி சக்திகளின் ஊடுருவலிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதும் ரொம்ப சிரமமான பணியாகவே திகழ்கின்றது. இந்த ஆக்கத்தில் குழந்தைகளை நெறிப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் சுருக்கமாகத் தொகுத்து வழங்கப்படுகின்றது.

நட்பும் அதன் ஒழுக்கமும்


-அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
-நட்பை வளர்த்தல்
(1) ஸலாம் கூறுதல்
(2) அன்பைத் தெரிவித்தல்
(3) சந்தித்தல்
-நட்பின் கடமைகள்
(அ) உதவி செய்தல்
(ஆ) நல்வழிப்படுத்துதல்
-தீய நட்பை முறிக்க வேண்டும்
-தூய நட்புக்கான கூலி
-நல்லோரை நேசிப்போம்!

பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி.